சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு 19 உத்தரவு

 மத்திய– மாநில அரசுப்பணிகளில் உள்ள ஐஏஎஸ்., ஐபிஎஸ். மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்துவருகிறார்.

பிரதமர் பதவியை ஏற்றதும் இதற்காக அவர் அரசின் பல்வேறுதுறை செயலாளர்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கொள்கைமுடிவு தொடர்பான ஆவணங்கள் 3 மேஜைகளுக்கு மேல் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்.

திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தன்னை எப்போது வேண்டு மானாலும் தொடர்புகொள்ளலாம் என்றும் மோடி அறிவுறுத்தி இருந்தார். அவரது இந்த எளிமையான நடை முறைகளால் மத்திய அரசின் பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பும், பணிகளில்வேகமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியபொறுப்புகளில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திரமோடி 19 உத்தரவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மோடியின் இந்த 19 உத்தரவுகள் நேற்றுமுன்தினம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ். அதிகாரிகளுக்கான அகில இந்தியசேவை (நடத்தை) விதிகள்–1968 சட்டத்திலும் பிரதமர் மோடியின் 19 உத்தரவுகள் திருத்தம்செய்து சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடியின் இந்த 19 உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள அந்த 19 உத்தரவு விபரம்வருமாறு:–

சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகிலஇந்திய பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்குநெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

முக்கியமுடிவுகள், திட்ட அமலாக்கங்களில் பெருந்தன்மையுடனும், அரசியல் பாரபட்ச மின்றியும் நடந்து கொள்ள வேணடும்.

உயர் பதவிகளில் உள்ளவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்கவேண்டும். நல்ல கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். கடமைகளை செய்வதில் தவறக் கூடாது.

பொதுமக்களால் மிகவும் எளிதில் அணுகப்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும்போது அதிகபட்ச பொறுபபுணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

நிர்வாகத்தில் வெளிபபடை தன்மையாக இருங்கள். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள், ஏழை எளியவர்கள் உங்களைத் தேடிவரும்போது அவர்களிடம் பரிவுடன் பேசுங்கள். கனிவாக நடந்துகொள்ளுங்கள்.

உங்கள் கடமையில் இருந்து தவறுசெய்யும் வகையில் தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்புகளோ பணம் மற்றும் கோரிக்கைகள் மூலம் உங்களை ஈர்க்க நினைத்தால் அடிபணி யாதீர்கள். உங்கள் பதவியை உங்களின் தனிப்பட்ட நலனுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் நலனுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்.

அரசு அதிகாரிகள் செய்யும் தேர்வு மற்றும் பரிந் துரைகள் அனைத்தும் தகுதி அடிப்படையிலேயே இருக்கவேண்டும். ஒருபோதும் பாரபட்சத்துக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.

அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மேன்மை படுத்துவதாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும்.

பொதுமக்கள் நலன் கருதி நீங்கள் எடுக்கும்முடிவு தனிப்பட்ட முறையில் உங்களால் மட்டுமே எடுக்கப்படுவதாக இருக்கவேண்டும். பொதுசொத்துக்களை திறமையாக பயன்படுத்துங்கள்.

அரசு பணத்தை செலவிடுவதில் திறமையான முடிவு எடுங்கள். சிக்கனமாக, சிறப்பாக செலவுகளை செய்யுங்கள். சட்டம், விதிகள், ஒழுங்கு நடத்தை விதிகள் மற்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள நடத்தை கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு காரியத்தை ஒரு போதும் செய்யாதீர்கள். அத்தகைய செயல்களில் இருந்து விலகியே இருங்கள்.

இவ்வாறு பிரதமரின் 19 உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...