சூரியசக்தி மின்உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டங்கள்

 மத்திய அரசு, உள்நாட்டில், சூரியசக்தி மின்உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, விரைவில், ஐந்து மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், தலா, 500 மெகா வாட் திறனுக்கும் மேற்பட்ட, மெகா சூரியசக்தி மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு வழங்கும்.குறிப்பாக, மத்திய பிரதேசத்தில், 750 முதல் 800 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு, ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, இம்மாநிலத்தில், இவ்வகையிலான மின்உற்பத்தி திறன், 195 மெகாவாட்டாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், அதிகபட்சமாக, 4,000 மெகாவாட் திறன்கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இம்மாநிலத்தின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 667 மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இதேபோன்று, ஆந்திராவிலும், இவ்வகையிலான மின் உற்பத்தி திறனை, 93 மெகாவாட்டிலிருந்து, 1,000 மெகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ள்ளது.

இவ்வகையில், உற்பத்தி செய்யப்படும் ஒருயூனிட் மின்சாரத்திற்கான கட்டணம், 5.50 ரூபாய் – 5.40 ரூபாய் வரையில் இருக்கலாம் என தெரிகிறது .சூரிய சக்திமூலம் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை, பயனீட்டாளர்களுக்கு விற்பனைசெய்யும் பணிகளை, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் (எஸ்இசிஐ.,) மேற்கொள்ளும்.

இதுகுறித்து, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சகத்தின் இணைசெயலர் தருண் கபூர் கூறியதாவது:நரேந்திரமோடி தலைமையிலான புதிய அரசு, சூரிய சக்தி மின்உற்பத்தியை அதிகரிக்க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான, முன் முயற்சிகள், பட்ஜெட்டில் அறிவிப்பிலேயே இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டில், சாத்தியக் கூறுகள் உள்ள மூலை முடுக்கெல்லாம், சூரிய சக்தி மின்உற்பத்தி மெகாதிட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.