தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்று வோம்

 பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து பணியாற்று வோம் என நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவை சுத்தப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி 'கிளீன் இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை யொட்டி டெல்லியில் துடைப்பம் எடுத்து குப்பையைகூட்டி இத்திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

அத்துடன் தூய்மை இந்தியாதிட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், நடிகை பிரியங்காசோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இதனை கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். கமல்ஹாசன் கூறும்போது, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுவேன் என்றும் இந்த இயக்கத்தில் 90 லட்சம்பேரை இணைப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவுதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான சுற்றுச் சூழலை அவர்களுக்கு அளிப்பது அதை விட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மைபாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவுதாருங்கள். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...