5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது

 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது. சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங் கள் பெட்ரோல் விலையை நிர்ணயம்செய்து வருகின்றன.

15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் இது போல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்து வருகிறது.

இந்தநிலையில் டீசல் விலையை குறைப்பது என நேற்று கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமுடிவில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறும்போது, ''கடந்த 5 ஆண்டுகளாக டீசல்விலை மாதந்தோறும் 50 பைசா உயர்ந்து வந்தது. இப்போது டீசல் விலை சர்வதேச சந்தை விலையைவிட அதிகமாக இருக்கிறது. எனவே டெல்லியில் நள்ளிரவு முதல் டீசல்விலை லிட்டருக்கு ரு.3.37 குறையும்'' என்றார்.

இதன் மூலம் மத்திய அரசுக்கு டீசல் விற்பனையில் ஏற்பட்டுவந்த மிகப் பெரிய மானியச்சுமை குறைந்தது. இனி பெட்ரோல் விலையை போல டீசல் விலையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்கும் என்றும் அருண்ஜெட்லி கூறினார்.

சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.3.65 குறைந்து ஒருலிட்டர் ரூ.59.27 ஆனது. மும்பையில் லிட்டருக்கு ரூ.3.72-ம், கொல்கத்தாவில் ரூ.3.51-ம் குறைந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...