சார்க் மாநாடு நாளை தொடங்குகிறது; பிரதமர் நேபாளம் பயணம்

 இந்தியா உள்ளிட்ட 8 தெற்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இரண்டு நாள் நடைபெறுகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று காத்மாண்டுக்கு செல்கிறார். அவருடன், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் செல்கிறது. 'சார்க்' நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுதான் 'சார்க்' மாநாட்டின் நோக்கம் ஆகும். 26-ந்தேதி, காத்மாண்டுவில் பிரிகுதிமண்டப் என்ற இடத்தில் உள்ள சிட்டி ஹாலில் மாநாடு தொடங்குகிறது.

மாநாட்டில், 8 நாடுகளின் தலைவர்களும் தங்கள் கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார்கள். மறுநாள் (27 -ந்தேதி) அனைத்து தலைவர்களும் துலிகேல் என்ற இடத்தில் நடைபெறும் அமர்வுக்கு செல்கிறார்கள். அங்கு அன்று மாலையில், காத்மாண்டு பிரகடனம் வெளியிடப்படுகிறது.

மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நேபாள பிரதமரை சந்தித்து பேசுகிறார். அபிவிருத்தி உதவி, ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி, சுற்றுலா போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பிற நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் பிரதமர் மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பை இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்களும் மறுக்கவில்லை. எனவே, இருவரும் சந்திப்பார்கள் என கருதப்படுகிறது.

ஏற்கனவே, மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தபோது, இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். எனவே, இது இவர்களின் இரண்டாவது சந்திப்பு ஆகும். இதற்கிடையே, மாநாட்டையொட்டி, காத்மாண்டுவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய சாலைகளில், நேபாள ராணுவத்தின் ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடக்கும் அரங்கைச் சுற்றி ராணுவம் அணிவகுப்பு ஒத்திகை நடத்தியது. தலைவர்களை வரவேற்க நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...