போர்களால் உணவு எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஜி 20 மாநாட்டில் மோடி கவலை

பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

நைஜீரியா, பிரேசில், கயானா நாடு​களுக்கு 5 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ம் தேதி டெல்​லியிலிருந்து புறப்​பட்​டார். முதலில் நைஜீரியா தலைநகர் அபுஜா சென்ற அவர், அந்த நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து பேசினார். அப்போது பாது​காப்பு, சுகா​தா​ரம், கல்வி, எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்​நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா​வும் நைஜீரி​யாவும் இணைந்து பணியாற்ற இரு நாடு​களின் தலைவர்​களும் உறுதியேற்​றனர்.

ஜி20 உச்சி மாநாட்​டில் பங்கேற்க பிரதமர் மோடி நைஜீரி​யா​வில் இருந்து நேற்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்​றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளி​யினர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்​றனர். சம்ஸ்​கிருதத்தில் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதினர். நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டன.

ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. முதல் நாளில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மாநாட்​டில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்​றார். காலை​யில் நடந்த அமர்​வில், வறுமையை ஒழிப்பது குறித்து விரிவாக விவா​திக்​கப்​பட்​டது. மாலை​யில், ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்பு​களில் சீர்​திருத்​தங்களை மேற்​கொள்வது குறித்து ஆலோசிக்​கப்​பட்​டது. முதல் நாள் அமர்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். அப்போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியது. அப்போது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை முன்வைத்தோம். இந்த கருப்பொருள் தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டுக்கும் பொருந்தும். சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் பிரதிநிதியாக இந்தியா செயல்படுகிறது. இதன்படி கடந்த உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணவு, எரிபொருள், உரங் களுக்கு தட்டுப்பாடுஏற்படுகிறது.

தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பிரேசில், வறுமைக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த கருத்தை இந்தியா ஆதரிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...