7-வது ஜிஎஸ்டி தினத்தையொட்டி வர்த்தக கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது

ஜிஎஸ்டி தினக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி, மத்திய கலால் பிரிவின் சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

கூடுதல் ஆணையர்டி.ரஞ்சித் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கை முதன்மை ஆணையர் ஜே.எம்.கென்னடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதன்மை ஆணையர் ஜி.எஸ்.டி தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வருவாய் வசூல் மூலம் தேசக்கட்டமைப்புக்கு பெரும் பங்களித்து வருவதாக அவர் கூறினார். சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் இயங்கும் ஜி.எஸ்.டி மையம் நாட்டிலேயே சிறந்த மையமாகத் திகழ்கிறது என்று அவர் பாராட்டினார்.

ஜி.எஸ்.டி வரிக்கான பதிவு செய்தல், கணக்குத் தாக்கல் செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவை குறித்த விளக்கப்படம் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...