நாடு ‘டோக்கன்‘ முறையிலிருந்து ‘டோட்டல்‘ அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளது

மருத்துவ வசதியில் நாடு ‘டோக்கன்‘ அணுகு முறையிலிருந்து ‘டோட்டல்‘ (மொத்த) அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளதாக மத்தியசுகாதாரம், குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திரமோடி தலைமையில், மத்திய அரசின் குறிக்கோளாக இருப்பது, சுகாதாரத்துறையில் முன்தடுப்பு மருத்துவம், நவீன மருத்துவ வசதி ஆகியவைகளுக்கிடையே ஒருங்கிணைந்து பணியாற்றுவதாகும் எனவும் மாண்டவியா குறிப்பிட்டாா்.

தில்லி கனாட் பிளேஸில் மத்திய அரசுக்குசொந்தமான லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவ மனையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புற நோயாளிகள் மற்றும் உள்-நோயாளிகளுக்கான கூடுதல்வசதிகள் கொண்ட கட்டடங்களை மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணை அமைச்சா் டாக்டா் பாா்தி பிரவீண் பவாா் முன்னிலையில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திறந்துவைத்தாா்.

இந்த புதிய கட்டடங்கள் மூலம் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான படுக்கைவசதிகள் 877 லிருந்து 1000 க்கும் மேற்பட்ட படுக்கைவசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தபுதிய பகுதியில் கூடுதலான அதிநவீன சிடிஸ்கேனா் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதே போன்று புதிய மல்டி-ஸ்பெஷாலிட்டி(பல்நோக்கு வசதி) புறநோயாளிகளுக்கான பிரிவில் அனைத்துவகையான மருத்துவம், அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணா்கள் உள்ளிட்ட முழுமையான சுகாதாரப் பாதுகாப்புகளுடன் கூடுதல்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது:

நாடு ‘டோக்கனில்‘ இருந்து விலகி ‘ ‘ டோட்டல்‘‘ (மொத்த)அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளது. ஏழைகளுக்கான மருத்துவ சிகிச்சை செலவைகுறைக்கப்பட்டு, மருத்துவா்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாம் முழுமையாகச் சிந்தித்து நீண்ட காலத்திற்கான பாதையை மருத்துவத்தில் உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் போது,​நாம் சுதந்திரத்தின் 100 -வது ஆண்டு நிறைவடையும் போது இந்தியா எத்தகைய சுகாதார உள்கட்டமைப்பு கொண்டு இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பாா்வையுடன் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது அதில் மாநிலங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 3-நாள்களாக குஜராத் கேவாடியாவில் நடைபெற்ற சிந்தனைக்கூட்டத்தில், அனைத்து மாநில சுகாதார அமைச்சா்களும் தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்துகொண்டனா். அதை எவ்வாறு உலகளாவியதாக மாற்றுவது என்பது பற்றியும் பயனுள்ளவிவாதம் நடந்தது. இதே போன்று மத்திய அரசின் எந்தவொரு செயல் திட்டத்திலும் பொது மக்கள் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.

ஆரோக்கியம் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் நோயாளிகளுக்கு கிடைக்கத்தக்கதாக மாற்றுவது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டாா்.

மத்திய இணை அமைச்சா் டாக்டா் பாரதி பிரவின் பவாா், நாட்டின் தலைநகரில் உள்ள பழமையான இந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சிறந்த சுகாதார வசதி என்பது நோய்களுக்கான சிகிச்சைக்கு மட்டுமல்ல அவை சமூக நீதியை ஊக்குவித்து மேம்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல், லேடி ஹாா்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் டாக்டா் ராம் சந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...