15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம்

திமுக அர­சுக்கு எதிர்ப்புத்தெரி­வித்து, வரும் 15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தமி­ழக பாஜக அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பால்விலையை பார்த்­தால் கண்­கள் இருண்டு போவ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

முதன்­மு­றை­யாக தமி­ழக பாஜக மண்­டல அள­வில்போராட்­டம் நடத்­தப்போவ­தாக அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து போராட்­டம் வெற்­றி­பெ­று­வதை உறுதிசெய்ய ­கட்சி நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

“திமுக ஆட்சிஅமைந்­தால் விடி­யலை தரு­கி­றோம் என்று சொல்­லி­விட்டு, பால்விலையை உயர்த்தி உள்ளது திமுக அரசு. இது­தான் மக்­கள் விடி­ய­லுக்­குத்தரும் விலையா?

“தமி­ழக அர­சின் ‘ஆவின்’ பால் வழங்­கும் நிறு­வ­னம், அதன் நிர்­வாகச் சீர்­ கேட்­டி­னால், நஷ்­டத்­தில் நடத்­தப் ­ப­டு­கிறது. தவ­றான நடை­மு­றை­யால் ஏற்­படும் வரு­வாய் இழப்பை மக்கள் தலை­யில் சுமத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது,” என்று அண்­ணா­மலை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­ துள்­ளார்.

ஏற்­கெ­னவே வீட்டுவரி உயர்வு, சொத்து, தண்­ணீர், கழி­வு­ நீர் வரி ஆகி­ய­வற்­று­டன் மின்­கட்­­ணத்­தை­யும் பத்­தி­ரப்பதி­வுக் கட்­ட­ணத்­தை­யும் தமி­ழக அரசு தாறு­மா­றாக உயர்த்திஉள்­ள­தா­க குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போது பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்கு பயன் ­படும் பாலுக்­கான விலை­யை­யும் உயர்த்தி இருப்­பது, வாக்­க­ளித்த தமி­ழகமக்­களை வஞ்­சிக்­கும் செயல் எனச் சாடியு ள்­ளார்.

“அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் விலை­கள் எல்­லாம் ஏறு­மு­க­மாக உள்ளநிலை­யில், தமி­ழக மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மட்­டும் இறங்குமுகத்­தில் உள்­ளது. பால் விலையை உயர்த்தி, மக்­களை துன்­பப்­ப­டுத்­து­கிறது தி­முக அரசு,” என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, முதல் முறை­யாக, பாஜக சார்­பில் தமி­ழ­கத்­தில் மண்­டலள­வில் போராட்­டம் நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக பாஜக தலை­வ­ராக அண்­ணா­மலை பொறுப்­பேற்ற பின்­னர், மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் 1,200 மண்­ட­லங்­க­ளை­யும் உட்­ப­டுத்தி, போராட்­டம் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை அதிகக்கூட்­டத்தை திரட்­டிகாட்­டும் மண்­ட­லத் தலை­வர்­களை பிர­த­மர் மோடி நேரில் சந்­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பாஜக நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...