ஒரு முறை எமதர்மன் பெருமாளை சந்தித்து ஆசிபெற்றார் . பிறகு கருட வாகனத்தில் தனது எமலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுகொண்டார் .
மகாவிஷ்ணுவும் எமதர்மனின் கோரிக்கையை ஏற்றுகொண்டார். ஒரு நாள் மகாவிஷ்ணு எமலோகம் சென்றார் அவரை எமதர்மனும் மகிழ்ச்சியோடு வரவேற்றார் .
பிறகு மகாவிஷ்ணு எமலோகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார், இந்நிலையில் எமலோகத்தின் தெற்கு திசையிலிருந்து கூக்குரலும், அழுகையும் கேட்டது. குரல்கேட்ட திசையை நோக்கி நடந்தார் பெருமாள்.
அங்கே பாவம் செய்த பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொண்டி ருந்தனர். அன்று ஏகாதசி . இன்று ஏகாதசி திதி_ஆயிற்றே என வாய் விட்டு சொன்னார். அந்தநிமிஷமே அவர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கி விட்டது. ஏகாதசி என சொன்னாலே பாவம்_தீரும் என்றால், ஏகாதசி விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு போய்வந்தால் எவ்வளவு புண்ணியம்சேரும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
ஏகாதசி, மகாவிஷ்ணு , ஏகாதசி விரதம்
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.