ராகுல் காந்தியின் அறிவுரைப்படியே நான் பணிபுரிந்தேன்

 முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்று விளக்க மளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு இது வேதனையான தருணம் என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த தாம் 4வது தலைமுறையாக அரசியல் பணி யாற்றி வருவதாக தெரிவித்தார். காமராஜர் காலத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் தமதுபாட்டனார் பக்தவச்சலம் என்று நினைவுகூர்ந்த அவர், அவரது காலத்திலிருந்து தமது குடும்பம் காங்கிரசிலிருந்து வருவதாக குறிப்பிட்டார். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் உணர்வுடன் முழுமையாக பணியாற்றியதாக தெரிவித்த அவர், சட்டத்திற்கு புறம்பாக தாம் பணியாற்ற வில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசியவர் 30 ஆண்டுகளாக காங்கிரஸில் தாம் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்துபணியாற்ற காங்கிரஸ் தமக்கு வாய்ப்பளித்ததையும் பேட்டியில் குறிப்பிட்டார். தமக்கு பணியாற்ற வாய்ப்புதந்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார். அர்பணிப்பு உணர்வுடன் தாம் பணியாற்றிய தாகவும் விளக்கமளித்தார். இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி வழியில் சுற்றுச் சூழல் அமைச்சராக தாம் பணியாற்றியதாகவும் கூறினார். சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் விருப்பமாக இருந்ததாக தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வுடன் முழுமையாக பணியாற்றியதாக தெரிவித்த அவர், சட்டத்திற்கு புறம்பாக தாம் பணியாற்றவில்லை எனவும் குறிப்பிட்டார்.
..

பெரும் முதலீடு கொண்ட திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று ஜெயந்தி நடராஜன் விளக்னமளித்தார். இதுகுறித்து பேசிய அவர் ஒரு சிலதொ-ழில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது உண்மைதான் என்ற அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். தமதுமுடிவுகளை அமைச்சரவை சகாக்கள் பலர் எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். மேலும்பேசிய அவர் கடந்த 2013 டிசம்பரில் பிரதமர் மன்மோகன் அழைத்து தம்மை பதவி விலக உத்தரவிட்டதாகவும், உத்தரவையடுத்து அரை மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிட்டார்.

பதவியை ராஜினாமாசெய்ததை தொடர்ந்து தம்மை குறிவைத்து கடுமையாக விமர்சனம் எழுந்ததாக கூறிய அவர், தம் மீது கூறப்பட்ட எந்த புகாரும் நிரூபிக்கப்பட வில்லை என்று குறிப்பிட்டார். அமைச்சர் பதவியிலிருந்து விலகியபிறகு கட்சி பணியிலும் தாம் ஓரங்கட்டப்பட்டதாக வேதனை தெரிவித்தார். தாம் ஓரங்கட்டப்பட்டது ஏன் என்று கட்சிதலைமை எந்த விளக்கத்தையும் அளிக்க முன்வர வில்லை,

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அனுமதி மறுத்ததற்கான காரணம் பற்றி மோடி விசாரித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்தபோது தாம் எந்த ஊழலும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் அறிவுரைப்படியே தாம் பணிபுரிந்ததாக தெரிவித்தார். மேலும்பேசிய அவர் தாம் தவறு செய்திருந்தால் தம்மை தூக்கில் போடட்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...