அண்ணன் ஸ்டாலினின் அடிச்சுவட்டிலே தங்கை கனிமொழி

 "உள் குடும்ப பூசலால்" உளுத்துப் போன தி.மு.க— பாராளுமன்ற தேர்தலில் பெற்றது "ஜீரோ"…… உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பெற்ற இடம் "ஜீரோ"……. குடும்பச் சண்டையால் வாரிசுப் போரால், உள் கட்சியில் மாபெரும் குழப்பம்… அதனால் மக்கள் மத்தியில் பெற்ற மதிப்பும் "0"…. இதை சரிகட்ட, யாரோ கொடுத்த ஆலோசனையில் ஸ்டாலினின் அரசியல், "அடி-வைப்புகள்" மாற்றியமைக்க, மறுசீரமைக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மோடி வழியில் தன் பிரச்சார யுக்தியும், தன்னை ஒரு "பிராண்ட்" ஆக நிலை நிறுத்தவும் "Positioning" செய்யவும் ஒரு பிரபலமான ஏஜென்சியை "ஸ்டாலின் குடும்பம்" தேர்ந் தெடுத்துள்ளது. அதன் வெளிப்பாடாக, ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ந் தேதியை ஐ.நா வின் வழியாக தாங்களும் "0" 'Discrimination Day' ஆக "கொண்டாடி இருக்கிறார்கள்.

இதற்காக சிறப்பு விளம்பரம்… எல்லா பத்திரிக்கைகளிலும், எல்லா மொழியிலும், எல்லோரையும் கவரும் வண்ணம்.. பொதுசேவையாக 1 லட்சம் பாட்டில் ரத்த தானமாம்…. "61 வயதான" ஸ்டாலின் தலைமை தாங்கும் தி மு க இளைஞரணி மூலம்….

"திமுக சுவடே இல்லாமல்", தன் பிறந்தநாளை "பாகுபாடுகளற்ற" புறந்தள்ளாத" ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாட அறைகூவல் விடுத்திருந்த ஸ்டாலின், ஒரு நிமிடம் இந்த அறை கூவலில் தன் அண்ணன் அழகிரியையும் "புறந்தள்ளாமல்" சேர்த்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்…..

அண்ணன் காட்டிய வழியில் தங்கை கனிமொழி

அண்ணன் ஸ்டாலினின் அடிச்சுவட்டிலே தங்கை கனிமொழியும் மார்ச் 7,8 உலக மகளிர் தினத்தை, திமுக மகளிர் அணி சார்பில் கோவையில் கொண்டாடி வருகிறார்.

அதற்கான பத்திரிக்கை விளம்பரங்கள் அண்ணனை விஞ்சும் வகையில் செய்துள்ளார். ஆம் அண்ணன் ""கால் பக்கம்" தங்கை "அரை பக்கம்" விளம்பரங்கள் –மளிருக்காக, மருத்துவ முகாம்– வேலை வாய்ப்பு முகாம், கலை நிகழ்ச்சிகள் என திமுக அடிச்சுவட்டில் ஆனால் அதன் "சாயம்" இல்லாமல் நிகழ்ச்சிகள் அரங்கேற்றியுள்ளார்.

ஆக தன்னை "புரமோட்" செய்து கொள்ள ஏஜென்ஸிகளை நாடியுள்ள அண்ணனும் தங்கையும், மீண்டும் குடும்பச்சண்டையில், யார் முன்னணியில்.. என்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

தேய்ந்து போன "டயரை" எத்தனை முறை "ரீ பட்டன்" செய்தாலும், தாங்குவது தானே தாங்கும், நம்பி பாரம் ஏற்ற, தொலை தூரம் செல்ல, உத்தரவாதம் கொடுக்க முடியாது தானே?

இப்போது திமுக குடும்பத்தில் ஏஜென்சிகளுக்கு ஏக கொண்டாட்டம் தான்…. என்ன தான் "Positioning செய்ய நினைத்தாலும்" மொச புடிக்கற மூஞ்சிய" பார்த்தாலே தெரியுமே! அரிதாரத்திற்குள் மறைந்திருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன?

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...