”தயவு செய்து உங்கள் அரசியல் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த கூடாது” என முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க., கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்ப் திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை நாடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது எதிர்பார்த்தது தான். வக்பு மசோதா எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்கு வங்கியை காப்பாற்றும் நாடகம்.
முந்தைய வக்பு சட்டத்தால் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவு செய்து உங்கள் அரசியல் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த கூடாது. முதல்வர் ஸ்டாலினின் தொடர்ச்சியான நாடகம், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு’2025 வக்ப் மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத முடியும்.
இதை ஒரு தேர்தல் தளமாக்கி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் முஸ்லிம்களை தவறாக வழிநடத்தவும், ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்குத் தெரியும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |