ஊழலை சுட்டிக் காட்ட, காங்கிரஸுக்கு உரிமை உண்டா

 ஊழலை சுட்டிக் காட்ட, காங்கிரஸுக்கு தார்மீக உரிமை உண்டா என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருப்பூரில் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய மாற்று சக்தியாக வளர்ந்து வருகிறது. இரண்டு கழகங்களுக்கு இடையே, வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வரும் 16-ம் தேதி, 'தமிழக மக்களோடு மத்திய அரசு' என்ற புதியதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துகிறார். இதில், மத்திய அமைச்சர்கள் 29 பேர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறார்கள். தமிழகமக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், அதை மத்திய அரசு பரிசீலிக்கும் தொடக்க நிகழ்வு அது.

வாரந் தோறும் சனிக்கிழமைகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு சம்பந்தமான கோரிக்கைளை பொது மக்கள் அளித்தால், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து, நிவர்த்தி செய்யப்படும். தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களில், 29 மத்திய அமைச்சர்கள், 3 மாநில முதல்வர்கள் என 32 பேர் தமிழக மக்களை சந்திக்க வருகிறார்கள். திருப்பூருக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் வர இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஊழலை சுட்டிக் காட்டிய வகையில் மகிழ்ச்சி. ஆனால், அதற்குகூட காங்கிரஸூக்கு தார்மீக உரிமை உண்டா? என்பது மிகப் பெரிய கேள்வி. 2 ஜியில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம்சொல்கின்றனர். காங்கிரஸை மக்கள் நம்பமாட்டார்கள்.

நிலம் கையகப்படுத்தல் மசோதா, விவசாயிகளுக்கு பாதுகாப்பான மசோதா ஆகும். ரியல் எஸ்டேட் மசோதா குறித்து ராகுல் பேசுகிறார்.

அவர், விடு முறையில் இருந்து, இன்னும் விடுபட வில்லை. அது, ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்தரும் மசோதா. சாலை பாதுகாப்பு மசோதாவில், வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்புள்ளது. இரண்டொரு நாட்களில் வரவுள்ள நீர்வழிப்பாதை மசோதா உள்ளிட்ட ஒவ்வொரு மசோதாவிலும் உள்ள சின்னஞ்சிறிய குறைகளை ஊதிப் பெரிது படுத்துகிறார்கள்.

சாலை பாதுகாப்பு மசோதா என்பது பசுத்தோல் போர்த்திய புலி என கருணாநிதி சொல்லியுள்ளார். அது, புலித்தோல் போர்த்திய பசு. தமிழக அரசு முற்றிலும் முடங்கிப்போய் கிடக்கிறது. முடங்கிக்கிடக்கும் அரசுக்கு, வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...