போலி கல்விசான்றிதழ் விவகாரத்தில் தில்லியின் முன்னணாள் சட்ட துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் கைது செய்யப் பட்டிருப்பதன் மூலம் ஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இந்தவிவகாரம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா கூறுகையில், பல்வேறு காரணங்களுக்கான மாற்று கட்சியினரை பதவி விலகக்கோரி வந்த ஆம் ஆத்மி , தனது கட்சியின் உறுப்பினராக தோமரை இது வரை ஏன் பதவி விலக கூறவில்லை.இந்தவிவகாரம் தொடர்பாக தோமர் பதவி விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்திய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தற்போது வேறுவழியில்லாமல் பதவி விலகி உள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்றார் அவர்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.