காங்கிரஸ்சில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது

 இந்தியாவில் 1975ல் கொண்டு வரப்பட்ட அவசரநிலையை கண்டித்து அதன் 40 ஆண்டு நிறைவையொட்டி பாஜக சார்பில் தாம்பரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

காங்கிரஸ் ஆட்சியில் 1975–ல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அவசர நிலையை கொண்டு வந்தார். அவசர நிலை இந்தியாவில் கறுப்புநாட்களாக உள்ளது. அவசர நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து இன்றைய இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவசர நிலையின் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது அவசர நிலையால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அவசரநிலை காரணமான ஆர்எஸ்எஸ். இயக்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வேலைகளையும் தொழிலையும் இழந்தனர்.

டெல்லியில் ஏராளமான கட்டிடங்கள் சஞ்சய்காந்தியால் இடித்து தள்ளப்பட்டது கட்டாய குடும்பகட்டுபாடு சட்டத்தை கொண்டுவந்து மக்களை கொடுமை படுத்தினர். இதற்கெல்லாம் எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராடி அவசரகால நிலை முடிவுக்கு வந்தபின் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அளித்தனர். இதில் காங்கிரஸ் உபி, பீகார் போன்ற மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது.

அப்போது இந்தியா என்றாலே இந்திரா என காங்கிரஸ் கட்சியினர் சொல்லிவந்தனர். இன்றைக்கு இந்தியா என்றால் இங்கு இருப்பவர்கள்தான் என்ற நிலை உள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் மூத்த காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கபட்டு ஒரு நபர் ஆதிக்கம் இருந்தது அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை இன்றைக்கும் அந்த கட்சியில் சோனியா காந்தி அதற்குபின்பு ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது.

நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களின் ஆதரவோடு திட்டங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியும். பாஜக. தொண்டர்கள் அதற்காக பாடுபடவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...