மாணவர்களைத் தாண்டி குழந்தைகளையும் நோக்கி பாயும் மது

 தமிழகத்தில் TASMAC மதுவினால் ஏற்படும் பாதிப்புகளும், சமூக அவலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்பாதிப்பு பெரியவர்களைத்தாண்டி, இளைஞர்களைத்தாண்டி, மாணவர்களைத்தாண்டி குழந்தைகளையும் நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. சமூகம் பயந்து கொண்டிருக்கிறது.

சாலைகளில் விபத்தினால் பாதிப்பு ஏற்படுவதற்கு ஹெல்மெட் மட்டுமே காரணமாக இல்லையென்றாலும், ஹெல்மெட் அதிகக் காரணமாக இருப்பதால் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை மக்கள் விரும்பி அணியும் நிலை வர வேண்டும். தலையைக் காக்க வேண்டும் என விரும்ப வேண்டும்.

அதே நேரத்தில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் அந்த பாதுகாப்பை பெற்றுக் கொள்ள அரசு ஆவன செய்ய வேண்டும். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. உடனே அத்தனை பிரச்சனைகளையும் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் இன்று விபத்திற்கும், சமூக அவலங்களுக்கும் காரணமாக இருக்கும் மதுவை ஒழிக்காமல் இந்தக் குற்றங்களை ஒழிக்க முடியாது! அதனால் எவ்வளவு விரைவாக மது ஒழிக்கப்படுவது இன்று அவசியமாகிப் போகிறது.

தமிழகத்தில் உள்ள அத்தனை TASMAC கடைகளையும் மூட வேண்டும். ப+ரண மதுவிலக்கோடு தமிழகம் விளங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அத்தனை மாவட்டங்களிலும், மாவட்டத்தில் உள்ள மண்டல்களிலும் TASMAC கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாஜக தொண்டர்களோடு, சமூக ஆர்வலர்களும், திரளாக பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். அனைத்து TASMAC கடைகளும் மூடப்படும் வரை பாரதிய ஜனதா கட்சி போராட்டம் தொடரும்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...