மூன்றாம் அலை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீத கொரோனா பாதிப்புகளும், 84 சதவீத உயிரிழப்புகளும் ஏற்படுவதாக குறிப்பிட்டார். கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பரவல் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலை அளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார். இரண்டாவது அலைக்கு முன்னதாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இதேநிலை இருந்ததால், மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கொரோனா பரவல் எண்ணிக்கை நீண்டகாலத்துக்கு அதிகரித்து இருந்தால், கொரோனா உருமாற்றம் பெறவும், புதிய வகை வைரஸ்கள் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரவல் முடிந்துவிடவில்லை என்றும், ஊரடங்கு தளர்வுக்குப் பிந்தைய நிலவரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...