பிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சென்றடைந்தார். லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லண்டனுக்கு சென்றுள்ள மோடிக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் விருந்து அளிக்கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இவ்வாறு உரையாற்றுவது இதுவே முதன் முறை. நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்திசிலையை பார்வையிடுகிறார்.
லண்டனில் உள்ள பிரிட்டனின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான வெம்ப்ளியில் நாளை நடைபெறும் இந்திய வம்சா வளியினரின் கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூனும் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சுமார் 600 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவைப் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.