சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி

திவ்யேந்து நந்தி என்ற பெயருக்கு, 'நிலவைப் போல் தெய்வீகமானது' என்று பொருள். ஆனால், இந்த இந்திய விஞ்ஞானியின் ஆர்வமெல்லாம் சூரியன் மீதுதான்.

37 வயதாகும் திவ்யேந்து, சூரியனைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார். சூரியனின் அண்மைக் கால புதிரான மாற்றங்களுக்கு விடை காண்பதே திவ்யேந்துவின்

பிரதான நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக, 'சன்ஸ்பாட்' எனப்படும் 'சூரியப் புள்ளிகளின்' மறைவு குறித்து.

கொல்கத்தாவைச் சேர்ந்த சூரிய இயற்பியலாளரான திவ்யேந்து, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்ïட் ஆப் சயன்ஸில் பயின்றவர். பின்னர், அமெரிக்காவில் மொன்டானா, ஹார்வர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்ட திவ்யேந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். சூரியன் தொடர்பான தனது ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2008- 2009-க்கு இடையில், சூரியனில் சூரியப் புள்ளிகள் காணாமல் போனது ஏன் என்பதே திவ்யேந்துவின் ஆய்வின் மையமாக இருக்கிறது. தொலைநோக்கிகள், பிற உபகரணங்கள் மூலம் சூரியனை ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு, ஏன் இவ்வாறு சூரியப் புள்ளிகள் காணாமல் போயின என்பது புரியாத புதிராக இருக்கிறது. சூரியப் புள்ளிகள் குறித்து விஞ்ஞானிகள் அதிக அக்கறை கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. பூமிவாழ் உயிரினங்கள் மீதும், விண்வெளி காலநிலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை இவை.

சக்திவாய்ந்த காந்தப்புலங்களான சூரியப்புள்ளிகள், அவ்வப்போது தோன்றுவதும், மறைவதும், அவற்றின் எண்ணிக்கையும், அடர்த்தியும் கூடுவதும், குறைவதும் இயல்புதான். ஆனால், இவ்வளவு நீண்ட காலத்துக்குக் காணாமல் போனதில்லை. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நிகழாத அதிசயம் இது. அதனால்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், காலநிலை ஆய்வாளர்களும் வியப்பும், கவலையும் அடைந்திருக்கின்றனர்.

சூரியப் புள்ளிகள் மறைவால் சூரி யனின் சக்தி சற்றுக் குறைந்து, சூரிய ஒளி சிறிது குறைந்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

சூரியனின் இந்த மாற்றம் பூமி மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றபோதும், பூமியின் வளிமண்டலப் படலத்தைச் சுருங்கச் செய்திருக்கிறது. எரிகற்கள் போன்ற விண்வெளிக் கழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டியாக வளிமண்டலப் படலம் உள்ளது. கழிவுகள் இந்தப் படலத்தை எட்டியதுமே எரிந்து அழிந்துவிடுகின்றன. ஒருமாதிரியான சுயசுத்திகரிப்பு அமைப்பு இது.

ஆனால், இëëந்தப் படலம் சுருங்கும்போது, விண்வெளிக் கழிவுகளை ஈர்த்து எரிக்கும் இதன் ஆற்றலும் குறைகிறது. ஆக, விண்வெளிக் கழிவுகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நமது செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயம் அதிகரிக் கிறது. தவிர, விண்வெளியில் இருந்து மேலும் அதிகமான மின்காந்த நுண்ணலைகள் பூமிப் பரப்பை அடையும். அது, பூமியின் பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து ஆராய்வதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி தனக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் திவ்யேந்து நந்தி. திவ்யேந்துவுடன், அவருடைய முன்னாள் பி.எச்டி., மாணவரான ஆண்ட்ரஸ் முனோஸ்-ஜராமில்லோவும், மொன்டானா பல்கலைக்கழகத்தின் பீட்ரஸ் மார்டன்ஸும் ஆய்வில் இணைந்துள்ளனர்.

சூரியப் புள்ளிகள் ஏற்படுத்தக்கூடிய சூரியசக்திப் புயல்கள் விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களிலும், தொலைத்தொடர்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்திய- அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு முக்கியமான ஆய்வில் நம்மவரும் இடம்பெற்றுள்ளது நமக்குப் பெருமைதானே!

One response to “சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...