மக்கள் எல்லாவகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிகவனம் செலுத்த வேண்டும்

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாவகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிகவனம் செலுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியுள்ளதாவது  *மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மெதுமெதுவாக மீண்டுவருகிறது. அரசாங்க, கட்சி, உதவிகளோடு தனியார் தொண்டுநிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெருமளவு பங்கெடுத்து கொண்டன. இன்னும் பலநிறுவனங்கள் சேவைசெய்து வருகின்றன. நிதியாக கொடுப்பவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து விடுகின்றனர்.

ஆனால், பல தொண்டுநிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏதாவது கட்டமைப்பிலோ, மறு சீரமைப்பிலோ இல்லை என்றால், ஏதாவது மக்கள் நலதிட்டங்கள் செய்ய நினைத்தாலோ ஒருவழிகாட்டுதல் இல்லாமல் பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நலத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் உதவ விரும்புகின்ற வர்களுக்கு ஓர் வழிகாட்டுதல் இருந்தால் நலமாக இருக்கும்.

அதிகம் பாதித்த புறநகர்பகுதிகள், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட இடங்களாகவே விளங்குகின்றன. அத்தனை தனியார் மருத்துவமனைகளும் வெள்ளம்பாதித்த மக்களுக்கான தனிப்பிரிவுகளை ஒரு மாதத்திற்காவது இயக்க வேண்டும்.

குஜராத்தில் சஞ்சீவினி திட்டம் ஏழை தாய்மார்களுக்கு நல்லமருத்துவ வசதி, அவர்கள் எந்த தனியார் மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். அதன் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்திவிடும். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் தயக்கமின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஓர்திட்டம் வந்த உடன் அங்கே தாய் சேய் இறப்பு விகிதங்கள் கணிசமாகக் குறைந்தது.

பல இடங்களுக்கு செல்லும்போது, அங்கு ஒவ்வோர் குடும்பமும் தங்களின் பொருட்களையும், இயந்திரங்களையும் பிரித்து வைத்து, துடைத்து சரிசெய்ய முடியுமா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதும், இதை சரிசெய்ய கொடுத்தால் அதன் செலவை தாங்கமுடியுமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியதை பார்த்ததும் பாவமாக இருக்கிறது. அதனால் எங்கு வேண்டுமானாலும் சரிசெய்து கொள்ளலாம் அதன் ஒருபகுதியை அரசாங்கம் ஏற்று கொள்ளலாம் என்ற திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மற்றும் பாதிப்படைந்த மக்களுக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தும் ஓர்திட்டம் நிறைவேற்ற வேண்டும். அப்படி என்றால் எங்கு வேண்டுமென்றாலும் சரிசெய்து கொள்ளலாம்.

முதல் பகுதியாக மீட்பு, உணவு, உடை, போர்வை, மருத்துவ உதவி போன்றவற்றை தாண்டி, இன்று மக்கள் இயற்கை பேரழிவி லிருந்து ஏற்பட்ட இழப்புகளிலிருந்தும், நஷ்டங் களிலிருந்தும் மீண்டு வருவதற்கான முயற்சிகளில் அத்தனை நிறுவனங்களும் உதவிபுரிய வேண்டும்.

சம்பளம் கூட கொடுக்க முடியாமல் சில தொழில் முனைவோர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் கொடுக்க முயல்வதோடு மட்டுமல்ல தங்கள் நிறுவனங்கள் தயாரித்த பொருட்களை திரும்ப பெற்றுக் குறிப்பிட்ட குறைந்த விலையில் புதுப் பொருட்களை வழங்கலாம். தங்கள் பொருட்களை விற்க விளம்பரத்திற்கு செலவிடும் செலவிலேயே இது நடைமுறைப் படுத்த முடியும்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...