மோடி குறித்த ஆவணப் படம், பி.பி.சி.யால் தயாரிக்கப் பட்டது அல்ல

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம், பி.பி.சி. நிர்வாகத்தால் தயாரிக்கப் பட்டது அல்ல. தனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்டு, பி.பி.சி.யால் மேற்பார்வை பார்க்கப் பட்டது என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம், “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்கிற தலைப்பில் சமீபத்தில் 2 ஆவணப் படங்களை வெளியிட்டது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உள்விவகாரத்தில் இங்கிலாந்து எப்படி தலையிடலாம் என்று ஏராளமானோர் கேள்விஎழுப்பினர். அதேபோல, குஜராத் கலவரத்துக்கும் பாரதபிரதமர் மோடிக்கும் தொடர்புஇல்லை என்று இந்திய உச்சநீதிமன்றமே தெரிவித்து விட்டது. அப்படி இருக்க, மோடியை குற்றவாளியைப்போல சித்தரித்து பி.பி.சி. எப்படி ஆவணப்படத்தை வெளியிடலாம் என்று ஏராளமானோர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில்தான், பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படம், அந்நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது அல்ல. தனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்டு பி.பி.சி.யால் மேற்பார்வையிடபட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப்ப்ளாக்மேன், தனியார் செய்திநிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களைப் போலவே எதிர் காலத்திலும் பல்வேறு விஷயங்களை இருநாடுகளும் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன. மேலும், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நன்மைபயக்கும் சுதந்திரமான வர்த்தக வளர்ச்சி குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இந்த சூழலில், அதை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வருத்தம் தரக்கூடியதே.

இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிஎழுப்புவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு குறிப்பிடத் தகுந்த வேலையைச் செய்திருக்கிறது. தற்போது உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது என்றால் அதற்குக்காரணம் மோடிதான். மக்கள் நினைத்தால் அரசை மாற்றக் கூடிய உலகின் மிகப்பெரிய இந்திய ஜனநாயகத்தை நாமும் கொண்டாடவேண்டும். நிகழாண்டு ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை யேற்றிருக்கும் நிலையில், நாங்கள் இந்தியாவுடனான உறவை வளர்த்து வருகிறோம். பி.பி.சி. நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும்பாலும் பிரசாரப்படம் போலவே இருந்தது. அந்த ஆவணப்படம், மலினமான இதழியல் பாணியில், நரேந்திரமோடியை தாக்கியிருக்கிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்த காலமும், பிரதமராக இருக்கும் காலமும் முழுவதுமாக புனைவுகள் நிறைந்ததாக இருந்தது. அந்த ஆவணப்படம் பி.பி.சி.யால் ஒளிபரப்பப் பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் உலக அளவில் பி.பி.சி.க்கென்று ஒருஅங்கீகாரம் இருக்கிறது.

மேலும், அந்த ஆவணப்படம் பி.பி.சி. நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது அல்ல. ஒருதனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்டு, பி.பி.சி.யால் மேற்பார்வையிடப் பட்டது. அந்த ஆவணப்படம் உண்மையைக் கூறவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குஜராத்கலவரம் குறித்த உண்மைகளை, அந்த ஆவணப்படம் பார்க்கத்தவறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தீர விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை உறுதிப் படுத்தும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறியிருந்தது. இந்த உண்மையை ஆவணப் படம் பார்க்க தவறிவிட்டது. அதேபோல, பி.பி.சி. நிர்வாகம் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையானது, அந்நிறுவனம் ஏதாவது விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் அதிகாரிகள் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். அதோடு, இந்தியாவிற்குள் இயங்கும் நிலையில், பி.பி.சி. நிர்வாகம் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறதா என்பதை தெளிவு படுத்துவது அவர்களது கடமையாகும். விரைவில் இதுசரியாகும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...