உயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் மட்டுமே சோதனை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை ஏதும் நடக்க வில்லை என்றும், இச்சோதனைக்கு ஜெக்ரிவால் அரசியல்சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் தனது அலுவலத்தில் சிபிஐ சோதனை நடந்ததாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது., அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடிய வில்லை என்பதால் இதுபோன்ற கோழைத்தனமான முடிவை மோடி இப்போது எடுத்துள்ளார் என கூறி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு அளித்துள்ள சிபிஐ., முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறையில் சோதனை  நடத்த வில்லை , முதல்வரின் முதன்மைசெயலாளர் ராஜேந்திர குமார் அறையிலேயே சோதனை என விளக்கம் அளித்துள்ளது.  

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்தார். நாடாளுமன்ற மேல் சபையில் விவாதத்தின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது., கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை எதையும் நடத்தவில்லை. உயர் அதிகாரிகள் ஒருவர் ஊழல் வழக்கில் தொடர்புபட்டுள்ளதால் அவரது அலுவலகத்தில் மட்டுமே சோதனை நடந் துள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...