ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டே வளர்கிறோம்

பாஜகவின் சித்தாந்தம் என்பது தமிழ்மண்ணை சார்ந்ததுதான். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்சி தமிழகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி, கார்த்திகை தீபத்துக்கு யாருமே அழைக்காமல் பலலட்சம் பேர் வருகிறார்கள். தமிழக மக்களுக்கு ஆன்மிகதேடல் இருக்கிறது. ஆன்மிகத்துடன் வாழ்க்கை பயணத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்பதாகத்தான் கோயிலை புண்ணிய தலமாக மக்கள் பார்க்கிறார்கள்.

கிரிவலம்செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கொரோனா பரவலைதடுக்க அரசு விதி வகுத்திருக்கும் போது, அதை பின்பற்றுவது எல்லோருடைய கடமை. ஆர்எஸ்எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய சேவைஅமைப்பு ஆகும். அதற்கு ஈடு எதுவும்கிடையாது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இசட் பாதுகாப்பில் உள்ளார். அவர் வருகையின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கம். சாலையில் உள்ள வேகத்தடை போன்றவற்றை தவிர்ப்பார்கள்.

மதுரை மாநகராட்சி துணை ஆணையர் அவருடைய உத்தரவில் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு மதுரை எம்.பி. கடிதம் எழுதுகிறார். உடனே, அரசு துரிதநடவடிக்கை எடுக்கிறது. இச்செயல் கண்டனத்துக்குரியது. அரசின் எண்ணங்கள் என்ன என்பதை இதுபிரதிபலிக்கிறது. இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பாஜக கடிதம் எழுதியிருக்கிறது. தவறுசெய்யாத அந்த அதிகாரியை மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்தியஅரசை கண்டிக்கிறோம் என்று கூறுவதில் எந்த முகாந்திரம் கிடையாது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் மட்டும் 41 லட்சம் தடுப்பூசிதான் கொடுக்கவேண்டும். ஆனால், 52 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. தடுப்பூசி கூடுதலாக கொடுக்கப்பட்டது. ஜூலையில் 70 லட்சத்துக்கும் கூடுதலாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும். தடுப்பூசி மையங்களில் திமுகவினர் சென்று, டோக்கனைபெற்று, தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு வழங்குகிறார்கள். இதைக் கண்டித்து தான் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் பணியை மத்திய அரசு செய்கிறது. லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என சொல்லி திமுக ஆட்சிக்குவந்தது. ஆனால், சொன்னது போல் குறைக்கவில்லை. முந்தைய அரசு மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் புதிய அரசு சோதனை நடத்துவதெல்லாம் தமிழகத்தில் வாடிக்கைதான். இதில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், அவர்கள் அரசியலுக்காக சோதனை நடத்தினார்களா என்பது தெரிந்து விடும். அரசு சொல்வதை யெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல் துறையினர் தனது கடமையைச் சரியாக செய்யவேண்டும். மனசாட்சிப்படி செய்ய வேண்டும்”

திருவண்ணாமலையில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...