பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம்தேதி பாகிஸ்தானுக்கு திடீர்பயணம் மேற்கொண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்தார். மோடியின் இந்த பயணத்தை ராஜதந்திர நடவடிக்கை என பாஜக., கூறியது. இருப்பினும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. மேலும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானதளத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து பிரதமரின் பயணத்தின் மீது மேலும் கேள்விகள் எழுப்பப் பட்டன.
இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணத்தை ஆதரித்துள்ளார். தன்னை பொறுத்த வரையில் இது ஒரு நல்லமுயற்சி என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டிற்குள் ஜனநாயககூறுகள் வலிமை பெறுவதுதான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மற்றும் இரு நாடுகளிடையேயான உறவு மேம்படுவதற்கும் முக்கியவழி என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.