ஸ்மார்ட் சிட்டி நிதியை வேறு திட்டங்களுக்கு பயன் படுத்தக் கூடாது

"பொலிவுறு நகரங்கள்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்கு ஒதுக்கப் படும் நிதியை, உள்ளாட்சி அமைப்புகள் வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.


 "பொலிவுறு நகரங்கள் திட்டம்; அடுத்தகட்டமுயற்சி' எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:


 பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு வரையறுக்க ப்பட்ட விதி முறைகளின் படிதான் இதற்கான நகரங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இதில் அரசியல் செய்வதற்கு துளி கூட இடமில்லை. இதற்கு சத்தீஸ்கர், கோவா போன்ற பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களை சேர்ந்த நகரங்கள் எதுவும் இத்திட்டத்தில் இது வரை இடம் பெறவில்லை என்பதே சான்றாகும்.


 பொலிவுறு நகரங்கள் திட்டம் வெற்றியடைய மாநகராட்சி, பேரூ ராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக பங்களிப்பும், பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். மேலும், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை உள்ளாட்சி அமைப்புகள், பிறதிட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது.


தற்போது இத்திட்டத் தின்கீழ் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களும் திட்டப்பணிகளை, வரும் ஜூன் 25ஆம் தேதிக்குள் தொடங்கவேண்டும். அன்றுதான் இத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கி ஓராண்டு நிறைவுபெறுகிறது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...