2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும்

2024ல், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாகவரும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

வேலுார் மாவட்டத்தில் நடக்கும், நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை வேலுாரில் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல்இல்லாத நிர்வாகம் அமைய, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். நீட்தேர்வால் அரசு பள்ளியில் படித்த 517 மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். கொரோனாவின் போது, 450 ரயில்களில் ஆக்சிஜனை எடுத்துவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவில்தான் 172 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.கிருஷ்ணா- கோதாவரி- தென்பெண்ணை நதிகளை இணைக்க 85 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதால், வேலுார்மாவட்டம் பயன்பெறும்.

2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை பொருத்துத்தான் இதுஅமையும்.வேலுார் மாநகராட்சியில் 1,234 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊழலின் காரணமாக இத்திட்டம் இன்னமும் முடியவில்லை. ஊழல் இல்லாத ஆட்சிஅமைய பா.ஜ., வால் மட்டும்தான் முடியும்.

தி.மு.க., மீது மக்களுடைய கோபம் எந்தளவு உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டதால் தான், நேரடியாக வராமல் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...