ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு

கூடலூர்அருகே உலாவரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட்மேபீல்டு பகுதியில் கடந்த ஏழுநாட்களாக ஆட்கொல்லி புலி மிகுந்த அட்டகாசம் செய்து வருகிறது 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் 3 மனிதர்களைக் கொன்ற புலியை பிடிக்கவனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர்பாடி இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரதுதலை பகுதியை தின்ற புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது.

இதையடுத்து, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, புலியைகண்டால் சுட்டுக்கொல்ல வேண்டும் என தமிழ்நாடு வனஉயிரின பாதுகாவலர் அதிரடி உத்தரவிட்டார். அதன் பேரில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் புலியைபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரத்துக்குவந்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. புலி என்பது நம் தேசியவிலங்கு என்பதோடு குறைந்த எண்ணிக்கையில் உள்ள உயிரினம். அதனை பொதுமக்கள் உதவியோடு புலியை மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...