இந்தியா சிறந்த நாடாக பலமுள்ள நாடாக ஒருநாள் மாறும்

இந்தியா மிகச்சிறந்த பலமான நாடாக மாறும் என்றும் அதற்கான முயற்சியின் போது சர்வாதிகாரம் நிறைந்த ஹிட்லர்களை உருவாக்காது என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது டெஹு. இங்குதான் மகான் துக்காராம் பிறந்தார். இந்த ஊரில் வைதீக பள்ளி தொடக்க விழா நடந்தது. பள்ளியை திறந்து வைத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: 

உலகின் மிகப் பழைமையான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்தவகையில், உலக நாடுகளுக்கு எல்லாம் நாம்தான் மூத்த சகோதரர்களாக இருக்கிறோம். ஆன்மிகத்தில் நீண்டபாரம்பரியம், மகான்களின் வழிகாட்டுதல்கள் போன்ற அரிய பலவிஷயங்களுடன் உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கும் அந்தஸ்தை பெறுவோம்.

இந்தியா சிறந்த நாடாக பலமுள்ள நாடாக ஒருநாள் மாறும். அதற்கான எல்லாவளமும் இங்கு இருக்கின்றன. நமக்குதேவை அர்ப்பணிப்புள்ள மக்களும் சமூகமும்தான். இவை கிடைத்துவிட்டால் புத்தர் மீண்டும் பிறப்பார். சங்கராச் சாரியார் மீண்டும் பிறப்பார், புனிதர்கள் மீண்டும் வருவார்கள். ஆனால், ஹிட்லர்கள் பிறக்கமாட்டார்கள்.

கடந்த காலங்களில் நம் இந்தியமக்கள் சைபீரியாவுக்கும் மெக்சிகோவுக்கும் பயணம்செய்தனர். ஆனால், அவர்களுடைய நிலத்தை நாம் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க வில்லை. அதற்கு பதில் யோகா, ஆயுர்வேதா, கணிதம், அறிவியல் போன்ற அறிவுகளை பரப்பினோம்.  இவ்வாறு மோகன்பாகவத் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...