மக்கள் குறைகளை ஒருமாதத்துக்குள் தீர்க்கவேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் 60 நாட்களுக்குள் அந்த குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
துடிப்பான மற்றும் துரித அரசு நிர்வாகத்துக்கான இயங்கு தளமாக ‘பிரகதி’ செயல்படுகிறது. இந்த தளம்மூலம் அரசு உயரதிகாரிகளு டன் பிரதமர் நேற்று உரையாடினார். அப்போது ஜனநாயகத் தின் மிகபெரிய அம்சமான மக்கள் குறைதீர்ப்பு நடவடிக்கைக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஒருமாதத்துக்குள் மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தவிர்க்க முடியாத பட்சத்தில், சற்று கால அவகாசம் எடுத்து 60 நாட்களுக்குள் தீர்க்க முயற்சிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சாலை, ரயில்வே, மின்சாரம், எண்ணெய் வளம் ஆகிய உள்கட் டமைப்பு திட்டங்களின் வளர்ச்சிகுறித்தும் இந்த கூட்டத்தின் போது பிரதமர் சீராய்வு செய்தார்.
குறிப்பாக ம.பி, சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி, பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.