முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப சிலகட்சிகள் முயற்சிப்பதாகவும் அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். ஏழைகள் மற்றும் நடுத்தரமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து, பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம்.
முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப சிலகட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது. ஜனசங்கத்தின் காலத்தில், நம்மைப்பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை. இருந்தாலும் நமது தொண்டர்கள் சிரமப்பட்டு புதிய இந்தியாவை கட்டியெழுப்பி உள்ளனர்.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சிலமுயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். அதன்மூலம் அரசியல் ஆதாயம்தேட முயற்சி நடக்கிறது.
பாஜக ஒவ்வொருமாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக் கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நாம் நிர்ணயித்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றவேண்டும். இந்தியா கனவுகளால் நிரம்பிய நாடாகப் பார்க்கப்படுகிறது.
உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. ஏற்கெனவே இருந்த அரசுமீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். 2014- ல் புதிய அத்தியாயத்தை எழுத மக்கள் முடிவுசெய்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தினர்.
நாட்டு மக்களிடையே இழந்த நம்பிக்கையை பாஜக மீண்டும்விதைத்தது. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நாம் தொடர்ந்து செயல்படவேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |