எங்களுடைய களப் பணியையும், மக்கள் நலப் பணியையும் பார்க்கத்தான் போகிறார்கள்

வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் பட்டியலுடன் தமிழக பாஜக. தலைவர்கள் இன்று டெல்லி செல்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

பாஜக.வின் உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, அகில இந்திய இணை அமைப்புசெயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், கூட்டணி கட்சிகளின் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவில், தமிழக பாஜக. தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வுடன் எந்தகட்சிகள் இணைய விரும்புகிறதோ? அந்த கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக. தலைமையில் இந்ததேர்தலை சந்திக்கிறோம். மக்கள் விரும்பும் கூட்டணியாக பாஜக. இருக்கிறது.

அதிமுக., திமுக. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. மக்கள்நல கூட்டணி எந்த வித அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்கள் நம்பிக்கையோடு பார்க்கும்கூட்டணி பாஜக. மட்டும் தான். அதனால் நாங்கள் மக்களை நோக்கி அசுர பலத்தோடு களத்தில் இறங்குகிறோம்.

வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் பணி பலக்கட்டங்களாக நடந்தது. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இன்று வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் பட்டியலுடன் டெல்லி செல்ல இருக்கிறோம். டெல்லியில் தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. இதில் எங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.


ஏற்கனவே இருந்தகூட்டணி அமையாவிட்டாலும், இருக்கும் கூட்டணியை வைத்து போட்டியிடுகிறோம். மிகச்சிறப்பான தேர்தல் அறிக்கை தயாராகிவருகிறது. அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

கூட்டணி அமையாததற்கு காரணம், தன்னை பற்றியும், சுய நலமாக முதல்-அமைச்சரை அறிவிப்பதிலேயே கட்சிகள் குறியாக இருப்பதால், மக்கள் நலன் புறம் தள்ளப்பட்டு இருக்கிறது. மக்கள் நல கூட்டணியில் மக்கள் நலன் புறம்தள்ளப்பட்டு ‘கேப்டன் விஜய காந்த் அணி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மக்கள் நலன்காக்கும் கூட்டணியாக பாஜக. இருக்கும்.

வைகோ ஒரு இடங்கள்கூட பாஜக.வுக்கு கிடைக்காது என்று கூறி இருக்கிறார். அப்படி இல்லை. பாஜக.வுக்கு ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவோம். எங்களுடைய களப் பணியையும், மக்கள் நலப் பணியையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...