திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டி

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டுகளே  மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சிநடத்தும் பாஜக இதுவரை கேரள சட்ட சபைக்குள் நுழைந்ததே இல்லை.

இதனால் இந்த சட்ட சபை தேர்தலில் கேரளாவில் எப்படியாவது கணிசமான இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்தி மோடியும், பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர். இதற்காக அமித்ஷா அடிக்கடி கேரளாவந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு செல்கிறார்.

அவரது ஆலோசனைப்படி கேரளாவில் உள்ள பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டனர். அவர்களை தேர்தலில் களமிற க்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நடிகர்கள் சுரேஷ் கோபி, பீமன் ரகு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரையும் தேர்தலில்நிறுத்தி வெற்றி பெற முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சுரேஷ் கோபி தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். ஸ்ரீசாந்த் பாரதீய ஜனதா நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றார். இதைத் தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவில் இணைந்தார். முதற்கட்டமாக கேரளாவில் போட்டியிடும் 51 தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதில் திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகர் பீமன் ரகு, பத்தனாபுரம் தொகுதியிலும், சினிமா டைரக்டர் அலி அக்பர் கொடுவள்ளி தொகுதியிலும், டைரக்டர் ராஜசேனன் நெடுமங்காடு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நடிகர் சுரேஷ்கோபியை திருவனந்தபுரம் தொகுதியிலும், ஸ்ரீ சாந்த்தை திருப்பூணித் துறை தொகுதியிலும் களமிறக்கலாம் என கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதேசமயம் திருப்பூணித்துறை தொகுதியில் பிரபல பேராசிரியர் துறவூர் விஷ்வம்பரன் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட முடிவு செய்து அங்கு வேலைகளையும் தொடங்கி விட்டார். இதனால் திருப்பூணித்துறையில் ஸ்ரீசாந்த்தை களமிறக்க அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சுரேஷ்கோபியும் போட்டியிட மறுத்துவிட்டதால் அவருக்கென ஒதுக்கப்பட்டு இருந்த திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

கேரளாவில் பாஜக, ஈழவ சமுதாய சங்கத்தை சேர்ந்த வெள்ளாப் பள்ளி நடேசன் தலைமையிலான பி.டி.ஜே.எஸ். கட்சியில் கூட்டணி அமைத்துள்ளது. அந்தகட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதம் உள்ள 111 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. நேற்று முதற்கட்டமாக 51 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். 2–ம் கட்டவேட்பாளர் பட்டியலில் மாநில நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெறும் என தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...