கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க.,வை ஆட்சிக்கு கொண்டுவருவதே எனது லட்சியம்

கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க.,வை ஆட்சிக்கு கொண்டுவருவதே எனது லட்சியம் என்று மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த எடியூரப்பாவுக்கு  தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்துதெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலையில் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்ற எடியூரப்பா, மடாதிபதி சிவகுமாரசாமியை சந்தித்து ஆசிபெற்றார்.

முன்னதாக பெங்களூருவில் நிருபர்களுக்கு எடியூரப்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில பா.ஜ.க தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மீது நம்பிக்கைவைத்து தலைவர் பதவியை கொடுத்துள்ளனர். அதனால் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க.,வை ஆட்சிக்கு கொண்டுவருவதே எனது லட்சியம். இதற்காக மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டியதும் அவசியமானதாகும்.

இன்னும் ஓரிரு நாட்களில் கட்சியின் முக்கியதலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்த உள்ளேன். கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சிபணிகளும் நடைபெறவில்லை. மக்கள்விரோத நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுவருகிறது. அனைத்து துறைகளிலும் அரசு தோல்வியடைந்து விட்டது.

அதனால் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள குறைகள், முறை கேடுகளை மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும். அதே நேரத்தில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் பிரதமர் நரேந்திரமோடி செய்து வரும் சாதனைகள் குறித்தும் மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் 2018-ம் ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சியைபிடிப்பது உறுதி. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.

மாநிலத்தில் பல்வேறு தாலுகாவில் வறட்சி நிலவுகிறது. இதனால் வறட்சிபாதிக்கப்பட்ட தாலுகாக்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும் விவசாயிகளை சந்தித்தும்பேச இருக்கிறேன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...