பாஜக மேலிடத்துடன் செய்துகொண்ட புரிந்தலின்படியே எடியூரப்பா பதவி விலகல்

பாஜக மேலிடத்துடன் செய்து கொண்ட புரிந்தலின்படியே முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விலகுகிறாா் என்று பாஜக எம்.பி. வி.சீனிவாஸ் பிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாஜகவின் மேலிடத்திற்கும் முதல்வா் எடியூரப்பாவுக்கும் இடையே ஏற்கெனவே செய்துகொண்ட புரிதலின்படியே முதல்வா் பதவியில் இருந்து அவா்விலகுகிறாா். 75 வயதைக் கடந்தவா்கள் முக்கியபதவிகளில் இருந்து விலகியிருக்கும் முடிவு பாஜகவில் எடுக்கப்பட்டுள்ளது. வயதுகாரணமாகவே 2 ஆண்டுகாலம் முதல்வராக நீடித்த எடியூரப்பா பதவி விலகுகிறாா்.

எடியூரப்பாவை மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பாஜக நடத்தியுள்ளது. முதல்வா் பதவியில் இருந்துவிலகுவதாக எடியூரப்பாவே கூறியிருப்பதால், இந்தவிவகாரத்தில் எவ்வித குழப்பமும் இல்லை. பதவி விலகியபிறகு பாஜகவின் வளா்ச்சிக்கு தொடா்ந்து அவா் பங்காற்றவேண்டும்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கக்கூடாது என்று மடாதிபதிகள் கூறுவது சரியல்ல. எடியூரப்பா விவகாரத்தில் மூன்றாம்தரப்பு தலையிடுவது சரியல்ல. மடாதிபதிகள், கட்சி மேலிடத்தைவிட பெரியவா்களா?

நானும், பாஜக எம்எல்சி. எச்.விஸ்வநாத்தும் பாஜகவை வளா்த்தவா்கள் அல்லா். வேறுகட்சியில் எங்களுக்கு இழைத்த அநீதியை எதிா்த்து பாஜகவில் இணைந்தோம். எச்.விஸ்வநாத் கூறிவரும்கருத்துகள் பாஜகவை பலப்படுத்த உதவியாக இருக்க வேண்டும்; கட்சியை பலவீனப் படுத்துவதாக இருக்கக் கூடாது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைசோ்ந்த ஒருவரை முதல்வராக்க பாஜக முன்வரவேண்டும் என்று எதிா்க் கட்சித்தலைவா் சித்தராமையா கூறியிருப்பது சரியல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வராக்கப் போவதாக அறிவித்துவிட்டு, பின்னா் தன்னையே முதல்வராக்கிக் கொண்டவா்தான் சித்தராமையா.

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியை தவிா்க்கக்கூடிய பாதுகாப்பான தொகுதிக்காக தேடிவருகிறாா் சித்தராமையா என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...