உட்தா பஞ்சாப் படம் பஞ்சாபில் கலவரத்தை உண்டுபண்ணும்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உட்தாபஞ்சாப் படம், பஞ்சாபில் கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 

உட்தா பஞ்சாப் திரைப்படத்தில் அதீதமான வன் முறை மற்றும் போதைப் பழக்கம் தொடர்பான காட்சிகள் உள்ளதாக கூறி படத்தில் வரும் 89 காட்சிகளை நீக்கும்படி தணிக்கைகுழு பரிந்துரை செய்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படம் குறித்து தனதுகருத்தை சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

இப்படத்தை பாலாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான சமீராநாயர் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சுவாமி, அவர் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். சமீராநாயரும், இணை தயாரிப்பாளரான அனுராக் காஷ் யப்பும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பணம் பெற்றுக் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பஞ்சாபில் கலவரத்தை ஏற்படுத்தி, எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதே இப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் எனக் கூறியுள்ள சுப்ரமணியன் சுவாமி, படத்தை தேர்தலுக்குபிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...