ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி

ஜவுளி, ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி வழங்குவதாக அறிவித்திருப்பதை கோவையை சேர்ந்த ஜவுளித்தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ஜவுளித்தொழில் துறையில் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், புதியதொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் ஜவுளி, ஆயத்த ஆடைதுறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி சிறப்புநிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் பொதுச்செயலர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதை தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம் என்ற தொழில் நிறுவனங்களின் நீண்ட கோரிக்கையையும் அரசு நிறைவேற்றி யுள்ளது.

இதனால், தொழில் நிறுவனங்களில் குறுகியகாலத்துக்கு மட்டும் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். மேலும், ஜவுளித் தொழில் மேம்பாட்டு நிதியை 25 சதவீதமாக உயர்த்தியிருப்பது, வரிச் சலுகை, உற்பத்தி ஊக்கத் தொகைகள் போன்ற திட்டங்கள் ஜவுளித்தொழில் துறையினருக்கு உற்சாகத்தை அளிக்கும் விதத்தில் உள்ளன. ஜவுளித்தொழிலில் முன்னணியில் உள்ள வியட்நாம், வங்கதேச நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறுவதற்கு இந்த அறிவிப்புகள் உறுதுணையாக இருக்கும். அதே நேரம், பேப்ரிக்கிற்கு இறக்குமதி சலுகை வழங்கப்படும் என்ற அறிவிப்பில் மட்டும் இந்தியாவில் இல்லாத ரகங்களை இறக்குமதி செய்ப வர்களுக்கு மட்டும் சலுகை வழங்கவேண்டும் என்றார் அவர்.

ஜவுளித் துறை நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாக சைமா தலைவர் எம்.செந்தில்குமார் கூறியுள்ளார்.

தொழிலாளர் சட்டங்களில் விலக்கு அளிக்கப் பட்டிருப்பது தொழில் துறையினருக்கு பயனளிக்கும். ஜவுளித்தொழில் நிறுவனங்களில் புதிதாகசேரும் தொழிலாளர்களுக்கு 12 சதவீத பங்களிப்புடன் பி.எஃப். திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பது இரு தரப்பினருக்கும் பலனளிக்கும்.

அதேபோல் ஜவுளித்தொழில் மேம்பாட்டு நிதியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீத உயர்த்தியிருப்பது, ஜவுளித்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க வழி வகை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...