ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி

ஜவுளி, ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி வழங்குவதாக அறிவித்திருப்பதை கோவையை சேர்ந்த ஜவுளித்தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ஜவுளித்தொழில் துறையில் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், புதியதொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் ஜவுளி, ஆயத்த ஆடைதுறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி சிறப்புநிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் பொதுச்செயலர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதை தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம் என்ற தொழில் நிறுவனங்களின் நீண்ட கோரிக்கையையும் அரசு நிறைவேற்றி யுள்ளது.

இதனால், தொழில் நிறுவனங்களில் குறுகியகாலத்துக்கு மட்டும் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். மேலும், ஜவுளித் தொழில் மேம்பாட்டு நிதியை 25 சதவீதமாக உயர்த்தியிருப்பது, வரிச் சலுகை, உற்பத்தி ஊக்கத் தொகைகள் போன்ற திட்டங்கள் ஜவுளித்தொழில் துறையினருக்கு உற்சாகத்தை அளிக்கும் விதத்தில் உள்ளன. ஜவுளித்தொழிலில் முன்னணியில் உள்ள வியட்நாம், வங்கதேச நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறுவதற்கு இந்த அறிவிப்புகள் உறுதுணையாக இருக்கும். அதே நேரம், பேப்ரிக்கிற்கு இறக்குமதி சலுகை வழங்கப்படும் என்ற அறிவிப்பில் மட்டும் இந்தியாவில் இல்லாத ரகங்களை இறக்குமதி செய்ப வர்களுக்கு மட்டும் சலுகை வழங்கவேண்டும் என்றார் அவர்.

ஜவுளித் துறை நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாக சைமா தலைவர் எம்.செந்தில்குமார் கூறியுள்ளார்.

தொழிலாளர் சட்டங்களில் விலக்கு அளிக்கப் பட்டிருப்பது தொழில் துறையினருக்கு பயனளிக்கும். ஜவுளித்தொழில் நிறுவனங்களில் புதிதாகசேரும் தொழிலாளர்களுக்கு 12 சதவீத பங்களிப்புடன் பி.எஃப். திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பது இரு தரப்பினருக்கும் பலனளிக்கும்.

அதேபோல் ஜவுளித்தொழில் மேம்பாட்டு நிதியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீத உயர்த்தியிருப்பது, ஜவுளித்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க வழி வகை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...