மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்

அடுத்த மாதம் தொடக்கத்தில் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறியகட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய மந்திரி சபையில் மொத்தம் 30 மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மந்திரி சபையின் பலத்தை 42 ஆக உயர்த்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மந்திரிசபை விரிவாக்கம் இந்தமாத கடைசியில் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்தமாதம் (ஜூலை) முதல் வாரம் வரை மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப் பட்டிருப்பதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மந்திரி சபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டதற்கு முதன்மை காரணம் பருவ மழை தாமதமே ஆகும். மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு சந்திப்புகள் நடைபெற்று முடிந்து விட்டன. பா.ஜனதா- சிவசேனா இடையே வார்த்தைப் போர் இருந்தாலும், சிவசேனாவுக்கு மந்திரி சபை விரிவாக்கத்தின் போது 2 இடங்கள் கூடுதலாக அளிப்பதில் எந்தவொரு மாற்றமு மில்லை.

இருந்தாலும், இந்தவிவகாரத்தில் சிவசேனா தலைமையிடம் இது வரை பேசவில்லை. இந்தவார இறுதியில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெற முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விரும்பினார். ஆனால், உத்தவ் தாக்கரே வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதும், மந்திரிசபை விரிவாக்கத்துக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் சுவாபிமானி சேத்காரி சங்கதானா, இந்திய குடியரசு கட்சி மற்றும் ராஷ்டிரசமாஜ் பக்ஷா உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு வாய்ப்பாக அக்கட்சி தலைவர்கள் டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களை சமீபத்தில் சந்தித்துபேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...