கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி

கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் உள்ளிட்ட பிறநிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரிசட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன் கிழமை அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2016-ம் ஆண்டு கடைகள், நிறுவனங்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணியிடச்சூழலை முறைப்படுத்துதல்) மாதிரி சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு மத்திய நிதிய மைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேலைவாய்ப்பை அதிகரிப்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்; 10 அல்லது அதற்கு அதிகமான தொழிலாளர் களுடன் செயல்படும் வணிகவளாகங்கள் போன்றவை வாரத்துக்கு 7 நாள்களும் செயல்படலாம். அவற்றுக்கு என குறிப்பிட்ட எந்த வேலைநேரமும் நிர்ணயிக்கப் படவில்லை. மாதிரிசட்டம், மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார். இந்தமாதிரி சட்டத்துக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு பெற வேண்டிய தில்லை. இந்த சட்டத்தில் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் மாற்றங்களை செய்து அமல்படுத்தி கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஊழியர்களுடன் கொண்டு இயங்கும் தொழிற் சாலைகள் அல்லாத கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிறநிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவைகளுக்கு ஆண்டு முழுவதும் 365 நாள்களும் விருப்பம்போல 24 மணி நேரமும் செயல்படுவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), உயிரிதொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரியும் உயர்திறன் கொண்ட தொழிலாளர்கள், நாளொன்றுக்கு 9 மணிநேரமும், வாரத்துக்கு 48 மணி நேரமும் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பதிலிருந்து சட்டத்தில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. போதியபாதுகாப்புடன் பெண்களை இரவுநேர பணியில் அமர்த்தவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் ஊழியர்களுக்கு குடிநீர்வசதி, உணவு விடுதி, முதலுதவி வசதி, சிறு நீர் கழிப்பதற்கான இட வசதி, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கான இடவசதி போன்றவற்றை உரிமையாளர்கள் செய்துகொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய கனிம ஆய்வு கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கபட்டது. இதன் வாயிலாக, தேசியபுவியியல் ஆய்வு மையத்தால் அடையாளம் காணப்பட்ட 100 சுரங்கங்களை மத்திய அரசு ஏலத்தில்விடுவதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...