ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே எதிராகச் செயல்படுபவர்கள் தான் பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச்செய்ய, பருவநிலை மாற்றம், ஏழ்மை ஒழிப்பு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு சவால் களைச் சமாளிப்பதற்கு உலகளவிலான உத்தியை பிரிக்ஸ் அமைப்பு வடிவமைத்து வருகிறது.  ஐ.நா. பாதுகாப்புகவுன்சில் மற்றும் அதன் பல்வேறு குழுக்களில் நாம் இணைந்து பணியா ற்றவும் போராடவும் வேண்டியுள்ளது.

பயங்கர வாதிகளில் நல்லவர்கள் என்று யாரும்கிடையாது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே எதிராகச் செயல்படுபவர்கள் தான் பயங்கரவாதிகள். அவர்களை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச் செய்யவேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட நாம் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப ஐ.நா. செயல் படுவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவசியம்.

பிரச்னைகளுக்கு கூட்டாகத் தீர்வுகளைக் காண்பதே பிரிக்ஸ்அமைப்பின் தலைவராக இந்தியாவின் முக்கிய பொறுப்பாக இருக்கும். இந்த அமைப்பானது உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிகட்டமைப்பில் தனி முத்திரையை பதித்துள்ளது.

இந்திய குடிமக்களில் 80 கோடிபேர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். இளைஞர்களான அவர்கள் தான் இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக மாற்றுவதில் உந்து சக்தியாக உள்ளனர். இளைஞர்களின் சக்தியை பிரதமர் மோடி நன்கு உணர்ந்துள்ளார். பிரேசிலின் ஃபோர்டலேசா நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றிய போது, இளைஞர்களின் பங்களிப்பு குறித்து சுட்டிக் காட்டினார்.

இளைஞர்சக்தி என்ற ரீதியில் பார்க்கும்போது, ஐந்து பிரிக்ஸ் நாடுகளும் ஏராளமான மனிதவளத்தை கொண்டுள்ளன .

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்துநாடுகள் அங்கம்வகிக்கும் பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது நம் நாடு தலைமை தாங்குகிறது. அந்தமைப்பின் 8-ஆவது உச்சிமாநாட்டை கோவாவில் வரும் அக்டோபர் மாதம் நடத்தஉள்ளது.

இதனிடையே, குவாஹாட்டியில் பிரிக்ஸ் அமைப்பின் இளைஞர் உச்சி மாநாடு, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஜூலை 1 முதல் 3ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தில்லி வந்திருந்த பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த இளைஞர்களிடையே அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...