இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல்

‘விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அவருக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை கிடையாது’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக சாடியுள்ளார்.

திருமாவளவன் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் கவனமாக கேளுங்க. சமூகநீதி பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி குறித்து அம்பேத்கர் கூறியது, அனைத்து மக்களுக்கும், கடைக்கோடியில் இருக்கும் மக்கள் அனைவரும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்றார். இதுதான் அம்பேத்கர் எண்ணம், கொள்கை. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.

திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும். அருந்ததியர் இட ஒதுக்கீடை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்கள் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்.

அவருடைய சின்ன கட்சி, அந்த அமைப்புக்கான தலைவராக தான் நான் பார்க்கிறேன். அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் சமூகநீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

சமூகநீதி என்றால் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் அம்பேத்கர் கோரிக்கை. இதற்கு தான் அவர் அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடை கொண்டு வந்தார். அந்த இடஒதுக்கீடை நீர்த்து போக செய்யும் அளவிற்கு செயலை திருமாவளவன் செய்து கொண்டு இருக்கிறார்.

அதனால் திருமாவளவன் எல்லாம் முதல்வர் ஆகுவதற்கான கனவு எல்லாம் நடக்காது. கவர்னர் உண்மையைச் சொன்னால் தி.மு.க.,வினருக்கு கசக்கிறது; கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...