இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல்

‘விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அவருக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை கிடையாது’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக சாடியுள்ளார்.

திருமாவளவன் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் கவனமாக கேளுங்க. சமூகநீதி பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி குறித்து அம்பேத்கர் கூறியது, அனைத்து மக்களுக்கும், கடைக்கோடியில் இருக்கும் மக்கள் அனைவரும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்றார். இதுதான் அம்பேத்கர் எண்ணம், கொள்கை. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.

திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும். அருந்ததியர் இட ஒதுக்கீடை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்கள் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்.

அவருடைய சின்ன கட்சி, அந்த அமைப்புக்கான தலைவராக தான் நான் பார்க்கிறேன். அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் சமூகநீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

சமூகநீதி என்றால் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் அம்பேத்கர் கோரிக்கை. இதற்கு தான் அவர் அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடை கொண்டு வந்தார். அந்த இடஒதுக்கீடை நீர்த்து போக செய்யும் அளவிற்கு செயலை திருமாவளவன் செய்து கொண்டு இருக்கிறார்.

அதனால் திருமாவளவன் எல்லாம் முதல்வர் ஆகுவதற்கான கனவு எல்லாம் நடக்காது. கவர்னர் உண்மையைச் சொன்னால் தி.மு.க.,வினருக்கு கசக்கிறது; கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...