மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி

”மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, மக்களை திசை திருப்பும் செயல். ஹிந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது வாடிக்கை.

தி.மு.க., – காங்., கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஹிந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக, தி.மு.க.,வினர் இருந்த துறைகளிலும் அதை முழுமையாக கடைபிடித்தனர்.

தமிழ் மொழியை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல திருவள்ளுவருக்கு கலாசார மையம் ஏற்படுத்தி இருக்கிறோம். இப்படித்தான் தமிழ் மொழியை உலக அளவில் போற்றுதலுக்குரிய மொழியாக ஆக்கி இருக்கிறோம்.

சென்னை துார்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த ஹிந்தி மாத நிறைவு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, திராவிட நல் திருநாடு என்ற வாக்கியம் விடுபட்டுள்ளது. அந்தத் தவறு யார் செய்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தவறுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்கும்போது, அந்த செயலுக்கு கவர்னரை தொடர்புபடுத்துவது நியாயமான விஷயம் இல்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில், கவர்னர் சிறப்பு விருந்தினராகவே கலந்து கொண்டார். அப்படி இருக்கும்போது, அவரை எப்படி நடந்த சிறு தவறுக்கு பொறுப்பாக்க முடியும்?

தமிழகத்தின் சமீபத்திய மழை வெள்ளத்தை, தி.மு.க., அரசு சரியாக கையாளவில்லை. அதை திசை திருப்பும் நோக்கிலேயே, தூர்தர்ஷனில் நடந்த ஒரு விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். இது 1967ம் ஆண்டு கிடையாது. தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நாம் யாரும் ஹிந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது; அதேசமயம் எதிர்ப்பாளர்களும் கிடையாது.

தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என சொல்லி விட்டு ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பரா? அதற்கு அவர்கள் முன் வர மாட்டார்கள். அவர்களுக்கு, அதில் வருமானம் கிடைக்கிறது. மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது; அது எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...