ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

இது குறித்து ஆங்கில டி.வி.,சேனலுக்கு அளித்த பேட்டியில் கேமரூன் கூறியதாவது:

இன்றைய உலகிற்கு பலமான பொருளாதார வளர்ச்சி, மிகுதியான ஜனநாயகம், பருவகால மாற்றத்திற்கு ஒரு பசுமை மாற்றம் ஆகிய மூன்றிலும் இந்தியா ஒளிர்கிறது. பிரதமர் மோடியின் பேச்சு மிகப்பெரியது. அவரது ஆளுமை மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியால் 3வது முறையும் பிரதமராகி உள்ளார். ஆனால், எங்களால் 3வது முறை பிரதமராக முடியவில்லை. அவரது திறமையால் உண்மையான மாற்றம், உண்மையான எண்ணங்களால் மிகச்சரியான பாதை ஆகியவற்றை இங்கு பார்க்கின்றோம்.

2ம் உலகப்போருக்கு பின்னர் உலகம் மாற்றம் நிறையவே கண்டிருக்கிறது. இன்றைக்கு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது. மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்கிற பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் கட்டாயம் இடம் தர வேண்டும்.

இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் தர வேண்டும் என்ற கேள்வி 2015ல் எழுந்தது. 2005ல் நான் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைவராக இருந்தபோது, இதற்கான விவாதம் எழுந்தது. அப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இருந்த ரிஷி சுனாக் பிரதமராக இருந்தார். அவரிடம் வெளியுறவு செயலராக நான் பெருமையாக கருதுகிறேன். இந்தியாவிற்கு வரும் காலத்தில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு டேவிட் கேமரூன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...