ரூபாய் நோட்டு பிரச்சனையால் பாஜக ஆளும் மாநிலங்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. மாறாக பல மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது .
கருப்பு, கள்ள ரூபாய்நோட்டுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இந்த அறிவிப்பிற்கு பின்னர், 4 மக்களவை தொகுதி, மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றதால், இந்ததேர்தலில் பொதுமக்கள் பிஜேபியை வெற்றி பெற வைக்கமாட்டார்கள் என எதிர்கட்சிகள் நம்பின. அதற்காக தீவிரபிரசாரத்தையும் மேற்கொண்டன.
இந்நிலையில், அதாவது, நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்தநேரத்தில் இந்த 13 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை தொடங்கியது.
அசாமில் உள்ள லக்கிம்பூர்,மத்தியப் பிரதேசத்தில் உள்ள சஹ்டோல், மற்றும் கூக்பெஹர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் பாஜக முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டம்லுக் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பாஜக 3-ம் இடம் பெற்று அசத்திஉள்ளது.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.