வளர்ச்சியில், மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறையில்லை

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில், மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குள்ள நகரில் பாஜக சார்பில் நேற்றுநடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சத்தீஸ்கர், ஜார்க் கண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தமாநிலங்கள் வேகமாகவளர்ச்சி அடைந்து வருகின்றன. சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதபிரச்சினை இருந்தும் அந்த மாநிலம் சீராக வளர்ந்து வருகிறது.

ஆனால் உத்தராகண்ட் மாநிலம் பின் தங்கிய நிலையில் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியில் மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறை யில்லை. தொலைநோக்கு திட்டம் இல்லை. வேலைவாய்ப்புகளை தேடி உத்தராகண்ட் மக்கள் வேறுமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதை தடுக்க முதல்வர் ஹரிஷ்ராவத் தவறிவிட்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாதுறையை மேம்படுத்துவோம். மூலிகை வளங்களை அதிகரிப்போம். மத்திய அரசின் முயற்சியால் உலகளாவிய அளவில் யோகா பிரபலமடைந் துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் யோகாவை கற்றுக்கொள்ள உத்தராகண்டின் ஹரித்வார், ரிஷிகேஷுக்கு வருவதற்கு ஆர்வமாக உள்ளனர். அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரப்படும். இதன்மூலம் உலக சுற்றுலா மையமாக உத்தராகண்ட் உருவெடுக்கும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது ஊழல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்தன. எனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன். ஏழைகளின் நலனுக்காக ஊழல், கறுப்புப்பணத்துக்கு எதிராக தொடர்ந்து போரிடுவேன் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...