ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்டவிருப்பம்

நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்டவிருப்பம் என பாஜக தேசியசெயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும்கூறியதாவது: நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை வழங்கியிருக்கிறது. மோடி ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டு மக்களைசந்திக்க திட்டமிட்டிருக்கிறோம்.


தங்களுக்கு கிடைக்கும் ஆதாரப் பூர்வமான தகவல்களை கொண்டே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகின்றனர். இது அவர்களதுகடமை. சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.


நிகழாண்டு போதியமழை இல்லை. அடுத்த ஆண்டு மழைபெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற வறட்சியான காலங்களில் காவிரி, வீராணம் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளை தூர்வாரும்பணிகளை விரைந்துசெய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இனிவரும் காலங்களில் பெய்யும் மழை நீர் வீணாகாது.


ரஜினிகாந்த் நல்ல மனிதர். பெரிய நடிகர். அவர் அரசியலுக்குவருவது அவரின் சொந்த விருப்பம். அதுபோல் அவர் ஏனைய தலைவர்களை புகழ்ந்துபேசியதும் அவரின் உரிமை. அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டியது அவர்தான் என்றார் இல. கணேசன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.