உத்தமனாக வேஷம் போடும் நடிகர்களின் உண்மை முகம்

2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுக்கான வருமானவரி ரூ.3.11 கோடியை செலுத்த நடிகர் சூர்யாவுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருமானவரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டது என்கிற அடிப்படையில் வரியின்மீதான வட்டியைக் கட்டுவதற்கு மட்டும் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூர்யா.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது.வழக்கைவிசாரித்த நீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடிசெய்துள்ளது.வருமானவரி மதிப்பீடு செய்வதற்கு நடிகர் சூர்யாவின் தரப்பு ஒத்துழைக்காததால் தான் கணக்கிடுவதில் தாமதமானது என்று வருமானவரித் துறை தரப்பு நீதிமன்றத்தில் விளக்கியது.

இதன் அடிப்படையில் சூர்யாவுக்கு வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் உரிமையில்லை என்றும் வாதம்செய்தது. இதன் அடிப்படையில் நடிகர் சூர்யாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி சுப்ரமணியம்.
முன்னதாக இதேநீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வுதான் நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மீதான நுழைவுவரி ரத்து வழக்கையும் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி நீதிபதி சுப்ரமணியம் அவர்களே..

குறிப்பு; வந்த வருமானத்தில் அரசுக்கு வரி செலுத்துவதிலேயே இவ்வளவு தில்லுமுல்லு என்றால்..?இந்த குடும்ப அகரம் பவுண்டேஷன் என்பது எல்லாம் வருமானத்திற்குதானோ..?உத்தமர்கள் போல்பேசுவது எல்லாம் வெளிவேஷம்தானோ..?அகரம் பவுண்டேஷனையும் வருமான வரிதுறை கவனத்தில் கொள்வது நல்லது.காரணம்..?ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல,இவர்களின் வேஷம் வெளிப்படுகின்றதே.
இந்த குடும்பமே மத்திய அரசின் எல்லா திட்டங்களையும்

எதிர்ப்பதும்,திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்வதும் இதற்குதானோ..? இனம் இனத்தோடு சேரும் என்பதும்,உன் நண்பன் யார் என்று சொல்,நான் உன்னைப் பற்றி சொல்கின்றேன் என்ற பொன்மொழிகளும் எத்தனை உண்மை…?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...