உத்தமனாக வேஷம் போடும் நடிகர்களின் உண்மை முகம்

2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுக்கான வருமானவரி ரூ.3.11 கோடியை செலுத்த நடிகர் சூர்யாவுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருமானவரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டது என்கிற அடிப்படையில் வரியின்மீதான வட்டியைக் கட்டுவதற்கு மட்டும் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூர்யா.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது.வழக்கைவிசாரித்த நீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடிசெய்துள்ளது.வருமானவரி மதிப்பீடு செய்வதற்கு நடிகர் சூர்யாவின் தரப்பு ஒத்துழைக்காததால் தான் கணக்கிடுவதில் தாமதமானது என்று வருமானவரித் துறை தரப்பு நீதிமன்றத்தில் விளக்கியது.

இதன் அடிப்படையில் சூர்யாவுக்கு வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் உரிமையில்லை என்றும் வாதம்செய்தது. இதன் அடிப்படையில் நடிகர் சூர்யாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி சுப்ரமணியம்.
முன்னதாக இதேநீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வுதான் நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மீதான நுழைவுவரி ரத்து வழக்கையும் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி நீதிபதி சுப்ரமணியம் அவர்களே..

குறிப்பு; வந்த வருமானத்தில் அரசுக்கு வரி செலுத்துவதிலேயே இவ்வளவு தில்லுமுல்லு என்றால்..?இந்த குடும்ப அகரம் பவுண்டேஷன் என்பது எல்லாம் வருமானத்திற்குதானோ..?உத்தமர்கள் போல்பேசுவது எல்லாம் வெளிவேஷம்தானோ..?அகரம் பவுண்டேஷனையும் வருமான வரிதுறை கவனத்தில் கொள்வது நல்லது.காரணம்..?ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல,இவர்களின் வேஷம் வெளிப்படுகின்றதே.
இந்த குடும்பமே மத்திய அரசின் எல்லா திட்டங்களையும்

எதிர்ப்பதும்,திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்வதும் இதற்குதானோ..? இனம் இனத்தோடு சேரும் என்பதும்,உன் நண்பன் யார் என்று சொல்,நான் உன்னைப் பற்றி சொல்கின்றேன் என்ற பொன்மொழிகளும் எத்தனை உண்மை…?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...