நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களில் பாதுகாப்பு சோதனையை நடத்தி முடித்துள்ளோம்

நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களில் மத்திய நெடுஞ் சாலைகள் துறை அமைச்சகம் பாதுகாப்பு சோதனையை நடத்தி முடித்துள்ளதாக அத்துறையின் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:
விவபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான பாலங்கள் மற்றும் தரைப் பாலங்கள் ஆகியவை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த பாலமேலாண்மை அமைப்பை (ஐபிஎம்எஸ்) எங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டு தொடங்கியது.


அதன்படி, முதல் கட்டமாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 186 பாலங்களை அந்த அமைப்பு சோதித்து முடித்துவிட்டது.
அவற்றில் 147 பாலங்கள் மிகவும் மோசமான நிலையிலும், உடனடி கவனம்செலுத்த வேண்டியவையாகவும் உள்ளன. மேற்கண்ட பாலங்களில் 23 பாலங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
பாலங்களை கண்காணிக்க நானோ, லேசர், சென்சார் போன்ற நவீனதொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றைச் சோதனை செய்வதற்கு ராடார்கள், அகச்சிவப்புக்கதிர் வசதி கொண்ட ஆளில்லா குட்டி விமானங்கள் ஆகியவை பயன்படுத்தப்படும்.


ஐபிஎம்எஸ் அமைப்பு கடந்த ஆண்டில் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப் பட்டது. இந்த அமைபப்பை உருவாக்குவதற்கு முன்பு பாலங்களை வரைபடரீதியில் அடையாளம் காண எந்தவொரு அமைப்பும் இல்லை. பல்வேறு பாலங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. அவை இடிந்துவிழும் நிலையில் உள்ளன.
தற்போது 1.6 லட்சம் பாலங்கள் குறித்த தகவல்தொகுப்பை ஐபிஎம்எஸ் அமைப்பு உருவாக்கியுள்ளது. அவை பல்வேறு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது பாதுகாப்பு பிரச்னைகளை தீர்ப்பதற்கான நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கும் என்றார் கட்கரி.


கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎம்எஸ் அமைப்பின் கூட்டத்துக்கு அவர் தலைமைவகித்தார். பாலங்களின் தேசிய அடையாள எண், அட் ரேகை, தீர்க்க ரேகை போன்ற விவரங்கள், பாலம் அமைந்துள்ள பகுதியின் சமூக}பொருளாதாரத் தகவல்கள் போன்ற விவரங்களை ஐபிஎம்எஸ் அமைப்பு திரட்டியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...