நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலனை

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இந்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது.


தற்போது உள்ள நடைமுறைப்படி நிதியாண்டின் தொடக்கம் ஏப்ரல்மாதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. வருமான வரிக் கணக்குத்தாக்கல் உள்பட பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகள், ஆண்டுதோறும் அந்தமாதத்திலேயே தொடங்குகின்றன. ஆண்டின் தொடக்கம் ஜனவரியாகவும், நிதியாண்டின் தொடக்கம் ஏப்ரலாகவும் இருப்பதற்கு பதிலாக இரண்டையும் ஒரேமாதிரியாக மாற்றியமைக்கலாம் எனக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.


இதையடுத்து அது குறித்து பரிசீலித்து வரும் மத்திய அரசு, விரைவில் அந்தவிவகாரம் தொடர்பாக முக்கிய முடிவினை எடுக்க உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நிதியாண்டை மாற்றியமைப்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக அரசு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் பிரத்யேககுழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக்குழு, தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.


அதை பரிசீலித்த பிறகு இதுதொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும். ஒருவேளை ஜனவரி மாதத்தில் இருந்து நிதியாண்டை தொடங்கினால், நவம்பர் அல்லது டிசம்பரில் மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

அதுகுறித்து தற்போது எந்தக்கருத்தும் தெரிவிக்க இயலாது என்று அந்தபதிலில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றும்பட்சத்தில் வரித்தாக்கலுக்கான காலக் கெடு உள்பட பல்வேறு விதிகளைத் திருத்தியமைக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை: இதனிடையே, மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொருகேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யும்திட்டம் எதுவுமில்லை என்று தெரிவித்தார். அதுதொடர்பான விஷயங்கள் எதையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.