பிரதமர் நரேந்திரமோடி குஜராத் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வுசெய்ய உள்ளார்.
வடக்கு குஜராத்தில் வெள்ள பாதிப்புபகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகாணப்படுகிறது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில்மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்தசூழ்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது, குஜராத்தில் பெய்துவரும் தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான நிலவரத்தை எடுத்துரைத்தார். மேலும் குஜராத் வந்து நிலைமையை பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத்சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட முடிவு செய்துள்ளதாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.